யாழில் காசோலை மோசடி; வவுனியாவைச் சேர்ந்த இருவர் கைது!

யாழில் காசோலை மோசடி; வவுனியாவைச் சேர்ந்த இருவர் கைது!

Editor 1

யாழ்ப்பாணத்தில் நிறப்பூச்சுகள் விற்பனை செய்யும் நிறுவனம் ஒன்றில் பொருட்களைக் கொள்வனவு செய்த பின்னர், காசோலையை கொடுத்து ஏமாற்றிய குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வவுனியாவைச் சேர்ந்த இருவரே நிறுவனத்திடம் 11 இலட்சம் ரூபாய் பெறுமதியான பொருட்களைக் கொள்வனவு செய்த பின்னர் காசோலையை வழங்கியுள்ளனர்.

இந்தக் காசோலையைக் கொண்டு சென்று வங்கியில் வைப்புச் செய்ய முற்பட்டபோதே அந்த வங்கிக்கணக்கில் பணம் இல்லை எனத் தெரியவந்துள்ளது.

பின்னர், நிறப்பூச்சு நிறுவனத்தினர் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததையடுத்து, விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் காசோலை மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இருவரை கைது செய்து பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்தனர்.

Share This Article