தென்மேற்குப் பகுதியில் மழை தொடரும் – வளிமண்டலவியல் திணைக்களம்!

தென்மேற்குப் பகுதியில் மழை தொடரும் - வளிமண்டலவியல் திணைக்களம்!

Editor 1

நாட்டின் தென்மேற்குப் பகுதியில் தொடர்ந்தும் மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களம் இன்று வெளியிட்டுள்ள அபாய எச்சரிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி மேல், சபரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில இடங்களிலும் 150 மில்லிமீற்றர் அளவில் பலத்த மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த எச்சரிக்கை எதிர்வரும் 24 மணித்தியாலம் வரை அமுலில் இருக்கும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Share This Article