மின்சாரம் தாக்கியே பாலித தேவப்பெரும காலமானார்!

மின்சாரம் தாக்கியே பாலித தேவப்பெரும காலமானார்!

editor 2

உயிரிழந்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் பாலித தெவரப்பெருமவின் பிரேத பரிசோதனை அறிக்கை வெளியாகியுள்ளது.

இதன்படி, மின்சார தாக்குதலுக்கு உள்ளான பாலித தெவரப்பெருமவின் உடற்பாகங்கள் முழுமையாக சேதமடைந்தமையினால் அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் இராஜாங்க அமைச்சருமான பாலித தெவரப்பெரும தமது வீட்டில் வைத்து மின்சார தாக்குதலுக்கு உள்ளான நிலையில் நேற்று உயிரிழந்தார்.

இதேவேளை, பாலித தெவரப்பெருமவின் இறுதிக்கிரியைகள் எதிர்வரும் வெள்ளிக்கிழமை இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், உடல் குடும்ப மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும் எனவும் அவரின் குடும்ப உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

Share This Article