இராமேஸ்வரம் மீனவர்கள் உண்ணாநிலைப் போராட்டம்!

இராமேஸ்வரம் மீனவர்கள் உண்ணாநிலைப் போராட்டம்!

editor 2

எல்லை தாண்டி மீன் பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள மீனவர்கள் ஐவரையும் உடனடியாக விடுவிக்க வலியுறுத்தி, இராமேஸ்வரம் மீனவர்கள் உண்ணாநிலைப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளனர்.

நாளை காலை முதல் இந்த உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபடுவதற்கு தங்கச்சிமடத்தில் இடம்பெற்ற அவசர கூட்டத்தின் போது, தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து, இலங்கை கடற்பகுதிக்குள் பிரவேசித்து மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதான மீனவர்களில் ஐவருக்கு நீண்ட நாட்களுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

Share This Article