ரி-20 தொடரைக் கைப்பற்றியது இந்தியா!

editor 2

அவுஸ்திரேலியாவுடனான இருபத்துக்கு இருபது தொடரில் போட்டியிட்ட இந்திய அணி 3 ஆவது போட்டியிலும் வெற்றி பெற்றதன் மூலம் தொடரைக் கைப்பற்றியுள்ளது.

ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் இதுவரை நான்கு போட்டிகள் நடைபெற்றுள்ளன. நான்கு போட்டிகளில் இந்திய அணி 03 போட்டிகளை வெற்றிகொண்டுள்ளது.

இன்று நடைபெற்ற 4 ஆவது போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற அவுஸ்திரேலிய அணி களத்தடுப்பைத் தேர்ந்தெடுத்தது.

அதன் அடிப்படையில், முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுக்களை இழந்து 174 ஓட்டங்களைப் பெற்றது.

பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி 20 ஓவர்கள் நிறைவில் 154 ஓட்டங்களை மட்டும் பெற்று 20 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.

இதன் மூலம் அவுஸ்திரேலியா இந்தியாவிடம் தொடரை இழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share This Article