இறுதிப் போட்டியில் இந்திய அணியை எதிர்கொள்கிறது அவுஸ்திரேலியா!

editor 2

2023 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் தென்னாபிரிக்க அணியை வெற்றிகொண்ட அவுஸ்திரேலிய அணி இந்திய அணியை எதிர்கொள்கிறது.

கொல்கத்தாவில் இடம்பெற்ற அரையிறுத்திப் போட்டியில் அவுஸ்திரேலியா மற்றும் தென்னாபிரிக்கா அணிகள் மோதின.

போட்டியின், நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற தென்னாபிரிக்கா அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதற்கமைய, முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்கா அணி 49 தசம் 4 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 212 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

அணிசார்பில் அதிகபடியாக, டேவிட் மில்லர் 101 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

பந்துவீச்சில் அவுஸ்திரேலியா அணியின் மிட்செல் ஸ்டார்க் மற்றும் பெட் கம்மின்ஸ் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

இந்தநிலையில், அவுஸ்திரேலியா அணி 213 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய நிலையில் 47.2 ஓவர்கள் நிறைவில் ஆவது ஓவரில் 7 விக்கெட்டுக்களை இழந்து 215 ஓட்டங்களைப் பெற்று வெற்றி இலக்கைக் கடந்தது.

இதன் மூலம் ஏற்கனவே இறுதிப்போட்டிக்குத் தெரிவாகியுள்ள இந்திய அணியை அவுஸ்திரேலிய அணி எதிர்கொள்ளவுள்ளது.

இறுதிப்போட்டி எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது.

Share This Article