தவணை விடுமுறை குறித்த தகவல் வெளியாகியது!

editor 2

உயர்தர பரீட்சை ஜனவரியில் நடைபெறுவதால் டிசெம்பர் மாத பாடசாலை விடுமுறையில் மாற்றம் மேற்கொள்ளப்படவுள்ளது. இதன் பிரகாரம் பாடசாலை தவணை விடுமுறை டிசெம்பர் 22ஆம் திகதி முதல் ஆரம்பமாகும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை உயர்தரப் பரீட்சைதொடர்பில் தேசிய மக்கள் சக்தி தலைவர் அநுரகுமார திஸாநாயக்க எழுப்பிய கேள்வி யொன்றுக்கு பதிலளிக்கையிலேயே மேற்கண்டவாறு கூறினார்.

மேலும், உயர்தர பரீட்சை நாள் தொடர்பில் பரீட்சைகள்திணைக்களம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. ஜனவரி 4 முதல் 31 ஆம் திகதி வரையில் பரீட்சை நடக்கவுள்ளது. இதன்படி யாரேனும் விண்ணப்பிக்க இருந்தால் அவர்களுக்கு 3 நாட்கள் மேலதிகமாக வழங்கப்பட்டுள்ளன.

இணையவழி மூலம் விண்ணப்பிக்க முடியும்.

பரீட்சை தொடர்பான கால அட்டவணை அடுத்த வாரமளவில் வெளியிடப்படும்.அத்துடன் பாடசாலை விடுமுறை இம்முறை டிசெம்பர் 22ஆம் திகதியளவில் வழங்கப்படலாம்.

ஆரம்ப பிரிவுகள் ஜனவரி 2ஆம் திகதி ஆரம்பிக்கப்படும். பரீட்சை முடிவடைந்தபின்னர் மற்றைய பாடசாலைகள்ஆரம்பிக்கப்படலாம்.

இது தொடர்பான உத்தியோகபூர்வஅறிவித்தல் கல்வி அமைச்சினால் விரைவில் வெளியிடப்படும் என்றார்.

Share This Article