குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் உதவி கட்டுப்பாட்டாளர் ஒருவரைக் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர் கைது செய்துள்ளனர்.
கணேமுல்ல சஞ்சீவவின் கொலை சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கூறப்படும் பாதாள உலகக் குழுவின் உறுப்பினரான டுபாயில் உள்ளதாகக் குறிப்பிடப்படும் ‘கெஹெல்பத்தர பத்மே’வுக்கு 3 போலி கடவுச்சீட்டுகளை வழங்கிய குற்றச்சாட்டின் பேரிலேயே அந்தத் திணைக்களத்தின் உதவி கட்டுப்பாட்டாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.