இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் முன்னிலையாகிறார் ரணில்!

இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் முன்னிலையாகிறார் ரணில்!

editor 2

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் 28 ஆம் திகதி வாக்குமூலம் அளிக்க வருவதாக இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவிடம் தெரிவித்துள்ளார்.

தனது சட்டத்தரணி மூலம் ஆணைக்குழுவுக்குத் தகவல் தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி, அன்றைய தினம் பிற்பகல் 02.00 மணிக்கு இலஞ்ச ஒழிப்பு ஆணைக் குழுவிடம் ஆஜராவதாக உறுதிப்படுத்தினார்.

பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க தொடர்பில் அவர் அளித்த சிறப்பு வாக்குமூலம் தொடர்பாக வாக்குமூலம் பதிவு செய்ய ரணில் விக்கிரமசிங்க இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவுக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

மாகாண சபையின் நிலையான வைப்பு நிதியை அரசு வங்கியில் தவறாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

மைத்திரிபால சிறிசேன – ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்தின் கீழ், அவர் இராஜாங்க அமைச்சராக இருந்த முந்தைய பதவிக் காலம் தொடர்பான
குற்றச்சாட்டுகளை இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு சுமத்தியுள்ளது.

Share This Article