நீச்சல் தடாகத்தில் மூழ்கி வவுனியாவில் இளைஞர் மரணம்!

நீச்சல் தடாகத்தில் மூழ்கி வவுனியாவில் இளைஞர் மரணம்!

editor 2

வவுனியா தவசிக்குளம் பகுதியில் அமைந்துள்ள நீச்சல் தடாகத்தில் குளித்துக்கொண்டிருந்த இளைஞர் ஒருவர் நீரில் முழ்கி உயிரிழந்தார்.

இந்த சம்பவம் புத்தாண்டு தினமான நேற்று மாலை இடம்பெற்றது.

நேற்று வவுனியா தவசிக்குளம் பகுதியில் அமைந்துள்ள நீச்சல் தடாகத்துக்கு தனது குடும்பத்துடன் வருகை தந்திருந்த இளைஞர் ஒருவர் தடாகத்தில் இறங்கி
குளித்துள்ளார்.

இதன்போது அவர் நீரில் மூழ்கினார் என்று தெரிவிக்கப்பட்டது. குறித்த இளைஞரை அங்கிருந்தவர்கள் உடனடியாக மீட்டு வவுனியா வைத்தியசாலையில் சேர்த்தனர். எனினும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்த சம்பவத்தில் கண்டி நாவலப் பிட்டியை சேர்ந்த 18 வயதான இளைஞரே உயிரிழநதார். அவரது சடலம் செட்டிக்குளம் பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பாக வவுனியா பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Share This Article