நிலாவெளியில் சிறிய வீடு ஒன்று தீக்கிரை!

நிலாவெளியில் சிறிய வீடு ஒன்று தீக்கிரை!

editor 2

திருகோணமலை – நிலாவெளி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட இக்பால் நகர் பகுதியில் உள்ள சிறிய வீடொன்றின் மீது இனந்தெரியாத நபரொருவர் தீ வைத்துள்ளதாக வீட்டின் உரிமையாளர் நிலாவெளி பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

இந்த சம்பவம் திங்கட்கிழமை (14) நள்ளிரவு இடம்பெற்றுள்ளது.

முகைதீன் பிச்சை சேகாலம் என்பவரின் வீட்டின் மீதே இவ்வாறு தீ வைக்கப்பட்டுள்ளது.

வீட்டின் உரிமையாளர் சம்பவத்தன்று வீட்டில் இருக்கவில்லை எனவும் இனந்தெரியாத நபரொருவர் வீட்டின் மீது தீ வைத்திருக்கலாம் என சந்தேகிப்பதாகவும் முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுளளது.

வீட்டின் அடுப்பங்கரை பொருட்கள் மற்றும் வீட்டு தளபாடங்கள் உட்பட பல பொருட்கள் தீயில் எரிந்து நாசமாகியுள்ளதாக வீட்டின் உரிமையாளர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரனைகளை நிலாவெளி பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

Share This Article