சுஜீவ சேனசிங்கவிற்கு 250 மில்லியன் ரூபா நட்டஈடாக செலுத்துமாறு சி.பி.ரத்னாயக்கவிற்கு உத்தரவு!

சுஜீவ சேனசிங்கவிற்கு 250 மில்லியன் ரூபா நட்டஈடாக செலுத்துமாறு சி.பி.ரத்னாயக்கவிற்கு உத்தரவு!

editor 2

அபகீர்த்தி ஏற்படுத்திய குற்றச்சாட்டு தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்கவிற்கு 250 மில்லியன் ரூபாயை நட்டயீடாக செலுத்துமாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சி.பி ரத்னாயக்கவிற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. 

இது தொடர்பான உத்தரவை கல்கிஸ்சை மாவட்ட நீதிமன்றம் பிறப்பித்துள்ளது. 

தொலைக்காட்சி ஒன்றில் நடைபெற்ற நேர்காணலின் போது முன்னாள் அமைச்சர் சி.பி ரத்னாயக்க, மத்திய வங்கியின் பிணை முறி மோசடி தொடர்பில் கருத்து வெளியிட்டிருந்தார். 

இந்த கருத்து மூலம் தமக்கு அபகீர்த்தி ஏற்பட்டுள்ளதாக கூறி நாடாளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்க வழக்கு தொடர்ந்திருந்தார். 

வழக்கு மீதான விசாரணையின் போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Share This Article