தலைமன்னாருக்கு தெற்காகவுள்ள கடற்பகுதியில் இன்று அதிகாலை சட்டவிரோதமாகக் கடற்றொழில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இந்திய மீனவர்கள் பத்துப் பேரை கடற்படையினர் கைதுசெய்துள்ளனர்.
இதன்போது, இழுவை படகொன்றும் கைப்பற்றப்பட்டதாக கடற்படை பேச்சாளர் தெரிவித்தார்.
கைதான மீனவர்களைக் கரைக்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகக் கடற்படை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தின் மண்டபத்தைச் சேர்ந்த மீனவர்களே 10 பேரை இவ்வாறு கைதாகியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதேவேளை,
கடந்த ஒரு வார காலப்பகுதியினுள், இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் மொத்தமாக இந்திய மீனவர்கள் 57 பேரே கைதாகியுள்ளதாக கடற்படை தகவல்கள் தெரிவிக்கின்றன.