மது போத்தலை கையூட்டாகப் பெற்ற பொலிஸார் ஒருவர் கைது!

மது போத்தலை கையூட்டாகப் பெற்ற பொலிஸார் ஒருவர் கைது!

editor 2

மதுபான போத்தல் ஒன்றை கையூட்டலாக பெற்ற பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

வாழைத்தோட்டம் பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பொலிஸ் உத்தியோகத்தருடன் துப்புரவுப் பணியாளர் ஒருவரும் புதுக்கடை நீதிவான் நீதிமன்ற வளாகத்தில் வைத்து கைதானதாகத் தெரிவிக்கப்படுகிறது.

பசறை பகுதியைச் சேர்ந்த ஒருவரினால் முன்வைக்கப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய குறித்த இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Share This Article