வாக்களித்தவுடன் வீடுகளுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தல்!

வாக்களித்தவுடன் வீடுகளுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தல்!

editor 2

எதிர்வரும் சனிக்கிழமை ஜனாதிபதி தேர்தலில் வாக்களித்த பின்னர் உடனடியாக வீடுகளுக்கு செல்லுமாறு நாட்டு மக்களிடம் தேர்தல் ஆணைக்குழு கேட்டுள்ளது.

காரணமின்றி வாக்குச் சாவடிகளில் அல்லது அருகில் இருக்க வேண்டாம் என்றும் வாக்காளர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

எந்தவொரு சந்தர்ப்பத்தில் தேர்தல் செயல்பாடுகளுக்கு இடையூறு ஏற்படுத்துவோருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க எச்சரித்துள்ளார்.

வாக்களிப்பு நிலையங்களுக்கு கைபேசிகளை எடுத்துச் செல்வது தடை செய்யப்பட்டுள்ளது. வாக்களித்த பின்னர் யாருக்கு வாக்களித்தீர்கள் என்பதை பகிரங்கமாகச் சொன்னால் அவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் அறிவுறுத்தியுள்ளார்.

இதேவேளை, ஜனாதிபதித் தேர்தலுக்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் தயார் நிலையில் உள்ளன என்றார்.

Share This Article