இந்திய மீனவர்கள் எண்மர் கைது!

இந்திய மீனவர்கள் எண்மர் கைது!

editor 2

மன்னார் அருகே இலங்கை கடற்பகுதியில் அத்துமீறி கடற்றொழிலில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் எண்மர் நேற்றிரவு கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்கள் பயணித்த படகு ஒன்றும் கையகப்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை பேச்சாளர் கெப்டன் கயான் விக்ரமசூரிய தெரிவித்தார்.

கைதானவர்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கடற்றொழில் திணைக்களத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கடற்படை பேச்சாளர் குறிப்பிட்டார்.

Share This Article