கட்சி தாவிய எம்.பி.மீது முறைப்பாடு!

கட்சி தாவிய எம்.பி.மீது முறைப்பாடு!

editor 2

ஜனாதிபதி ரணிலுக்கு ஆதரவு தெரிவித்துள்ள ரிஷாத் பதியுதீன் கட்சியின் எஸ். எம். எம். முஷாரப் எம். பிக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஒழிப்பு
ஆணைக்குழுவில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

அவரின் கட்சியான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின்
உறுப்பினர்களே நேற்று வெள்ளிக்கிழமை இந்த முறைப்பாட்டை பதிவு
செய்துள்ளனர்.

அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான எஸ். எம். எம்.
முஷாரப் உள்ளிட்ட உறுப்பினர்கள் அரச நிதியை தவறாகப் பயன்படுத்துகின்றனர் என்று கூறியே இந்த முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதேநேரம்,

முஷாரப் எம். பி. வரும் ஜனாதிபதித் தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி
ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவாக நேற்று அங்குரார்ப் பணம் செய்து
வைக்கப்பட்ட ‘இயலும் சிறீலங்கா’ கூட்டணியில் இணைந்துள்ளார் என்பதும் சுட்டிக்காட்டத்தக்கது.

Share This Article