‘பேஸ்புக்’ பெயரில் திருட்டு மோசடி!

'பேஸ்புக்' பெயரில் திருட்டு மோசடி!

editor 2

பேஸ்புக் ஆதரவு குழுக்களை போன்று பாவனை செய்து மக்களின்
தனிப்பட்ட தகவல்களைத் திருடும் மோசடி நடைபெறுகின்றது. இது
தொடர்பில் மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று தேசிய
கணினி அவசர பிரிவு அறிவுறுத்தியுள்ளது.

இவ்வாறான மோசடிகள் தொடர்பில் நேற்று முன்தினம் மட்டும் 8 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டன என்றும் தெரிவிக்கப்பட்டது.

பேஸ்புக் ஆதரவு குழுக்களாகக் காட்டிக்கொண்டு வட்ஸ்அப் மற்றும்
குறுஞ்செய்திகளை அனுப்புவதன் மூலம் இந்த மோசடி நடக்கிறது. பேஸ்புக் கணக்கு அல்லது பக்கம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டதாக பேஸ்புக் ஆதரவு குழுவிடமிருந்து உங்களுக்கு ஒரு செய்தி வரலாம். அதைத் திரும்பப் பெற, உங்கள் தகவலை சிறிது பணத்துடன் அனுப்ப வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருக்கும்.

இது திட்டமிட்ட மோசடி கும்பலின் செயல்பாடு. எனவே, உங்கள் பேஸ்புக் பக்கம் தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டால அல்லது செயலிழக்கச் செய்யப்பட்டால்
பேஸ்புக் பயனர்கள் வட்ஸ்அப் மூலம் வரும் எந்த செய்திகளுக்கும்
பதிலளிக்கவோ அல்லது உங்கள் தகவலை வழங்கவோ வேண்டாம்.

உங்கள் தனிப்பட்ட தகவல் மற்றும் உங்கள் பேஸ்புக் கணக்கு தொடர்பான
கடவுச்சொல் உட்பட முக்கியமான தகவல்களை வழங்குவதன் மூலம் உங்கள்
பேஸ்புக் கணக்குக்கான அணுகல் வெளிதரப்பினருக்கு அனுமதிக்கப்படும்.

எனவே, இதுபோன்ற செய்திகளுக்கு பதிலளிப்பதைத் தவிர்க்குமாறும் கேட்கப்பட்டுள்ளது.

Share This Article