வேட்பாளர்கள் தொடர்பில் முன்னாள் தேர்தல்கள் ஆணையாளர் விமர்சனம்!

editor 2

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவரின் ‘சார்பு” வேட்பாளர்களாக பல சுயேட்சை வேட்பாளர்கள் பயன்படுத்தப்படுகின்றனர் என முன்னாள் தேர்தல் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

பல சுயேட்சை வேட்பாளர்கள் ஒரு பிரதான வேட்பாளருடன் தொடர்புடையவர்கள் என்பது வெளிப்படையான விடயம் தேர்தலில் வாக்குகளை பெற அவர்கள் சார்பு வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர் என அவர் தெரிவி;த்துள்ளார்.

என்னால் சுயேட்சை வேட்பாளர்கள் குறித்து மோசமாக எதனையும் தெரிவிக்க முடியாது இஜனாதிபதி ரணில்விக்கிரமசி;ங்க சுயேட்சை வேட்பாளராக போட்டியிடுகின்றார்இஎன மகிந்த தேசப்பிரிய குறிப்பிட்டுள்ளார்.

என்னுடைய அனுபவத்தின் மூலம் பல பிரதான வேட்பாளர்களின் சார்பு வேட்பாளர்களாக பல சுயேட்ச்சை வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர் என்பதை என்னால் தெரிவிக்க முடியும்இஒரு சுயேட்சை வேட்பாளருக்கு ஆதரவளிப்பதற்காக அந்த கட்சியுடன் நெருங்கிய தொடர்புடைய நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் தேர்தலில் போட்டியிடுகின்றனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான எந்த சவாலையும் எதிர்கொள்ள நான் தயார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

புதியவிதிமுறைகளின் மூலமே இந்த நிலையை மாற்றியமைக்க முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.

உள்ளுராட்சி தேர்தல்களில் இளைஞர்களிற்கு வழங்கப்பட்டுள்ள ஒதுக்கீடு முறையை மாகாணசபை பொதுத்தேர்தலிற்கும் விஸ்தரிக்கவேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Share This Article