நாட்டில் 500 பாடசாலைகளை டிஜிற்றல் மயமாக்க சீனா நிதி வழங்கியது!

நாட்டில் 500 பாடசாலைகளை டிஜிற்றல் மயமாக்க சீனா நிதி வழங்கியது!

editor 2

நாட்டின் சாதாரண தரக் கல்வியை டிஜிட்டல் மயமாக்கும் நோக்கில் சீன அரசாங்கத்திடமிருந்து 20 மில்லியன் அமெரிக்க டொலர்களை பெற்றுள்ளதாகக் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். 

பாடசாலை கல்வியை டிஜிட்டல் மயமாக்குவது தொடர்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். 

இதன்படி, அடுத்த ஆண்டு முதல் பாடசாலை கல்வியை டிஜிட்டல் மயமாக்கும் திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது. 

இதற்காக நாடளாவிய ரீதியில் உள்ள 500 பாடசாலைகள் தெரிவு செய்யப்பட்டுள்ளதாகக் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

Share This Article