பின்வாங்குவாரா நாமல்?

பின்வாங்குவாரா நாமல்?

editor 2

ஜனாதிபதித் தேர்தல் சமரிலிருந்து நாமல் ராஜபக்ஷ கடைசி நேரத்தில் பின்வாங்கக்கூடும் என்று பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

பிரதான கட்சிகளுடன் பேரம் பேசுவதற்காகவே நாமல் ராஜபக்ஷ வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.’ஜனாதிபதித் தேர்தலில் நாமல் போட்டியிடமாட்டார், அவர் போட்டியிடுவது மஹிந்த ராஜபக்சவுக்கும்
நல்லது அல்ல. சஜித் மற்றும் ரணிலுடன் பேரம் பேசி ஆதரவை வழங்குவதற்காகவே நாமல் வேட்பாளராக பெயரிடப்பட்டுள்ளார் என நினைக்கின்றேன்.

சிலவேளை, நாமல் ராஜபக்ஷ போட்டியிட்டால்கூட அவருக்கு ஐந்தாவது இடம்தான் கிட்டும்.

முதல் இடம் ஜனாதிபதி ரணிலுக்கு, இரண்டாவது இடம் சஜித்துக்கு, மூன்றாவது இடம் அநுரவுக்கு கிடைக்கப்பெறும்.’ – எனவும் எஸ்.பி. திஸாநாயக்க
குறிப்பிட்டார்.

Share This Article