வேட்பாளர்கள் 22 பேர் கட்டுப்பணம் செலுத்தினர்!

வேட்பாளர்கள் 22 பேர் கட்டுப்பணம் செலுத்தினர்!

editor 2

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்காக 4 வேட்பாளர்கள் இன்று (07) கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 

இன்றைய தினம், சோஷலிச சமத்துவக் கட்சியின் வேட்பாளரான பாணி சிறிவர்தன கட்டுப்பணத்தைச் செலுத்தியுள்ளார்.

அத்துடன், மேலும் 3 சுயேச்சை வேட்பாளர்களும் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர். 

இதன்படி, இதுவரையில் மொத்தமாக ஜனாதிபதி வேட்பாளர்கள் 22 பேர் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 

ஜனாதிபதித் தேர்தல் எதிர்வரும் செப்டம்பர் 21ஆம் திகதி இடம்பெறவுள்ள நிலையில், அதற்காக கட்டுப்பணம் செலுத்துவதற்கான கால அவகாசம் எதிர்வரும் 14ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளது.

Share This Article