நாகை – காங்கேசன்துறை இடையே மீண்டும் கப்பல் சேவையாம்!

நாகை - காங்கேசன்துறை இடையே மீண்டும் கப்பல் சேவையாம்!

editor 2

தமிழகத்தின் நாகபட்டினத்திலிருந்து காங்கேசன்துறை வரையான கப்பல் சேவை மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் 14 ஆம் திகதி ஆரம்பித்துவைக்கப்பட்ட குறித்த கப்பல் சேவையானது பல்வேறு காரணங்களினால் இடை நிறுத்தப்பட்டது.

இந்த நிலையில் அடுத்த வாரம் முதல் இந்தக் கப்பல் சேவை மீண்டும் ஆரம்பிக்கப்படும் என சிவகங்கை கப்பல் நிறுவன இயக்குநர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் நாளைய தினம் இந்த கப்பல் சேவைக்கான சோதனை ஓட்டம் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Share This Article