கணவனை திட்டமிட்டு கொலை செய்த குற்றச்சாட்டில் யாழில் பெண்ணும் இளைஞரும் கைது!

கணவனை திட்டமிட்டு கொலை செய்த குற்றச்சாட்டில் யாழில் பெண்ணும் இளைஞரும் கைது!

editor 2

வன்முறை கும்பலை ஏவி கணவனை படுகொலை செய்த குற்றச்சாட்டில் பெண் ஒருவரும் அவருக்கு உடந்தையாக இருந்த இளைஞரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர். _ன் 3ஆம் திகதி அதிகாலை 3ஆம் திகதி அதிகாலை கோழி இறைச்சிக்கடை உரிமையாளர் ஒருவர் வெட்டிக் கொல்லப்பட்டார்.

வெளிமாவட்டத்திலிருந்து இறைச்சிக்காக கொண்டு வரப்பட்ட கோழிகளை வழங்கிய பின்னர் வாகனம் திரும்பிச் சென்றிருந்தது.

இதன் பின்னர் வீட்டின் வெளியே சத்தம் கேட்கவே குடும்பஸ்தர் வெளியே வந்து பார்த்துள்ளார். அப்போது, வன்முறை கும்பல் அவரை வாளால் வெட்டியது.

சத்தம் கேட்டு அவரின் மனைவி வெளியே வந்தபோது,

அவரை வாள்முனையில் அச்சுறுத்தி தங்க சங்கிலியை கொள்ளையிட்டு அந்தக் குழு தப்பிச் சென்றதாகக் கூறப்பட்டது.

படுகாயமடைந்த குடும்பஸ்தர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில் உயிரிழந்தார்.

இந்தக் கொலை தொடர்பில் விசாரணை நடத்திய நெல்லியடி பொலிஸார், நகைக்காகவே இந்தக் கொலை இடம்பெற்றதாக கொலையானவரின்
மனைவி பொய்கூறி நாடகமாடியதை கண்டுபிடித்தனர்.

தொடர்ந்து, அந்தப் பெண்ணைக் கைது செய்தனர். அவரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் இது திட்டமிட்ட கொலை என்பதை கண்டறிந்தனர். அத்துடன், இந்தக் கொலையுடன் தொடர்புடைய இளைஞரையும் கைது செய்துள்ளனர்.

Share This Article