புறாமலைத்தீவுக்கு சென்ற பயணிகள் மீது தாக்குதல் நடத்தியதாக மூவர் கைது!

புறாமலைத்தீவுக்கு சென்ற பயணிகள் மீது தாக்குதல் நடத்தியதாக மூவர் கைது!

editor 2

திருகோணமலை, குச்சவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புறாமலை தீவுக்கு செல்லும் உள்ளூர் பயணிகள் மீது தாக்குதல் நடத்திய படகு சேவை உரிமையாளர்கள் மூவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

தெஹிவளை பகுதியில் இருந்து புறா தீவுக்கு சென்ற சுற்றுலாப் பயணிகள் மீது தாக்குதல் நடத்திய 60, 40 மற்றும் 45 வயது படகு உரிமையாளர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த தாக்குதலில் சுற்றுலா பயணி ஒருவர் காயமடைந்து நிலாவளி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற பின் வீடு திரும்பி உள்ளார்.

இச்சம்பவம் கடந்த 27 ஆம் திகதி மாலை இடம் பெற்றுள்ளது.

கைது செய்யப்பட்டவர்களை 29 ஆம் திகதி காலை திருணமலை நிதிவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தியதாகவும் ஆஜர் படுத்தியவர்களில் ஒருவர் கடுமையான இருதய நோயாழி என தெரிவித்தது அவருக்கு சரீர பிணை வழங்கப்பட்டுள்ளதுடன், மற்றும் இருவரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார்.

Share This Article