அஞ்சல் மூல வாக்களிப்பு; விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் திகதி அறிவிப்பு!

அஞ்சல் மூல வாக்களிப்பு; விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் திகதி அறிவிப்பு!

editor 2

ஜனாதிபதித் தேர்தலுக்கான அஞ்சல் மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் கால அவகாசம் எதிர்வரும் 05 ஆம் திகதி நள்ளிரவுடன் நிறைவடையவுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

அதன்படி, குறித்த தினத்தில் அல்லது அதற்கு முன்னதாகக் கிடைக்கப்பெறும் வகையில் விண்ணப்பங்களை மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர்களுக்கு அனுப்பிவைக்குமாறு அந்த ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிவிப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அஞ்சல் மூல விண்ணப்பங்கள் எதிர்வரும் 5ஆம் திகதி அஞ்சலிடப்பட்டால் அவை செல்லுபடியாகாது எனத் தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

Share This Article