போதைப் பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் 24 மணி நேரத்தில் 720 பேர் கைது!

போதைப் பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் 24 மணி நேரத்தில் 720 பேர் கைது!

editor 2

நாடளாவிய ரீதியில் நேற்று நண்பகல் 12 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலயத்துக்குள் மேற்கொள்ளப்பட்ட யுக்திய நடவடிக்கையின் போது
போதைப்பொருள் வைத்திருந்த குற்றம் தொடர்பில் 720 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு கைது செய்யப் பட்டவர்களில் 702 ஆண்களும் 18 பெண்களும் அடங்குவதாக பொலிஸார் கூறினர்.

இதேவேளை, கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் 21 பேர் பொலிஸ் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளதுடன், 27 பேர் புனர்வாழ்வு நிலையங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.

இந்த சந்தேக நபர்களிடமிருந்து 190 கிராம் 286 மில்லி கிராம் ஹெரோயின், 220 கிராம் ஐஸ், 1128 கிராம் 026 மில்லி கிராம் கஞ்சா, 307 போதை மாத்திரைகள் மற்றும் 24, 741 கஞ்சா செடிகள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.

Share This Article