மன்னாரில் ஆமணக்கு விதை உட்கொண்ட மாணவர்கள் எண்மர் வைத்தியசாலையில் அனுமதி!

மன்னாரில் ஆமணக்கு விதை உட்கொண்ட மாணவர்கள் எண்மர் வைத்தியசாலையில் அனுமதி!

editor 2

மன்னார் மாவட்டம் – மடு கல்வி வலயத்துக்குட்பட்ட பாடசாலை ஒன்றில்
கல்வி கற்கும் தரம் – 4 ஐச்சேர்ந்த மாணவர்கள் 8 பேர் திடீர் சுகவீனம் காரணமாக வெள்ளிக்கிழமை மன்னார் மாவட்ட பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

மடு கல்வி வலயத்துக்குட்பட்ட பாடசாலை ஒன்றில் தரம் – 4 இல் கல்வி கற்கும் 9 வயதுடைய 8 மாணவர்கள் இவ்வாறு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்தப் பாடசாலையில் தரம் – 4 இல் கல்வி கற்கும் மாணவர் ஒருவர் தனது வீட்டில் எண்ணெய் எடுப்பதற்காக காய வைத்திருந்த ஆமணக்கு விதைகளை பாடசாலைக்கு கொண்டு வந்து சக மாணவர்களுடன் அதை உட்கொண்ட நிலையிலேயே குறித்த மாணவர்கள் திடீர் சுகவீனமடைந்து உள்ளதாக தெரியவந்துள்ளது .

இந்த நிலையில் குறித்த 8 மாணவர்களும் உடனடியாக மன்னார் மாவட்ட பொது மருத் துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Share This Article