கடற்படைச் சிப்பாய் மரணம்; இந்திய மீனவர்களுக்குச் சிக்கல்!

கடற்படைச் சிப்பாய் மரணம்; இந்திய மீனவர்களுக்குச் சிக்கல்!

editor 2

இந்திய மீன்பிடி படகு மோதி கடற்படை சிப்பாய் உயிரிழந்தமையை கொலையாகக் கருதி விசாரணை நடத்தவுள்ளதாக கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா தெரிவித்துள்ளார்.

நெடுந்தீவு கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்த இந்திய மீன்பிடி படகில் இருந்தவர்களை கைது செய்ய முற்பட்ட போது கடற்படை சிப்பாய ஒருவர் உயிரிழந்தார். கடற்படை படகில் இருந்து இந்திய மீனவர்களின் படகுக்கு செல்ல முயற்சித்தபோது இந்திய மீன்பிடி படகு ஆபத்தை விளைவிக்கும் வகையில் செலுத்தப்பட்டதாலேயே இந்த விபத்து ஏற்பட்டது. இதில் பிரியந்த ரத்நாயக்க என்ற சிப்பாய் நேற்று முன்தினம் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share This Article