மின்சாரம் தாக்கியதில் புதுக்குடியிருப்பில் இளைஞர்கள் இருவர் ஆபத்தான நிலையில்!

மின்சாரம் தாக்கியதில் புதுக்குடியிருப்பில் இளைஞர்கள் இருவர் ஆபத்தான நிலையில்!

editor 2

மின்சாரம் தாக்கியதில் உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்ட இளைஞர்கள் இருவர் முல்லைத்தீவு பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

புதுக்குடியிருப்பில் நேற்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் இடம்பெற்ற இந்த சம்பவத்தில், வேணாவில், புதுக்குடியிருப்பு 10ஆம் வட்டாரத்தை சேர்ந்த 20 வயது இளைஞர்கள் இருவரே பாதிக்கப்பட்டனர்.

புதுக்குடியிருப்பு சந்தியிலுள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் இடம்பெற்ற இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,

நிறுவனத்தின் தண்ணீர் தொட்டியை சுத்திகரிப்பதற்காக இளைஞர் ஒருவர் கட்டடத்தின் மேல் தளத்துக்கு சென்றபோது மின்சாரத்தால் தாக்குண்டுள்ளார்.

மேலே சென்றவரை காணவில்லையென அருகிலுள்ள கடை ஒன்றில் பணியாற்றும் மற்றைய இளைஞர் மேல் தளத்துக்கு சென்றபோது மின்சாரம் தாக்கியதில் கீழ்த்தளத்துக்கு தூக்கி வீசப்பட்டார்.

உயிருக்கு ஆபத்தான நிலையில் அங்கிருந்தவர்களால் மீட்கப்பட்ட இருவரும் உடனடியாக புதுக்குடியிருப்பு ஆதார மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக முல்லைத்தீவு பொது மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர்.

Share This Article