மின் கட்டணத் திருத்தம் தொடர்பில் ஜூலை 15 அறிவிப்பு வெளியாகும்!

மின் கட்டணத் திருத்தம் தொடர்பில் ஜூலை 15 அறிவிப்பு வெளியாகும்!

editor 2

மின்சாரக் கட்டணத்தில் திருத்தம் செய்வது தொடர்பில் எதிர்வரும் ஜூலை 15ஆம் திகதி அறிவிக்கப்பட உள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

மின்சாரக் கட்டணத்தில் திருத்தங்கள் செய்வது தொடர்பில் பொதுமக்களிடம் எழுத்து மூலமாக கருத்துக்களைப் பெறும் நடவடிக்கை எதிர்வரும் ஜூலை 8ஆம் திகதி வரையில் முன்னெடுக்கப்பட உள்ளதாக ஆணைக்குழுவினால் அறிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 9ஆம் திகதி கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் பொதுமக்களிடம் கருத்து கோரும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட உள்ளன.

மின்சாரக் கட்டணங்களை திருத்துவது தொடர்பில் இலங்கை மின்சார சபை முன்மொழிந்துள்ள யோசனைகள் அண்மையில் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் ஒப்படைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Share This Article