புதிதாக ஆசிரியர்கள் 11 ஆயிரம் பேர் நியமனம்!

புதிதாக ஆசிரியர்கள் 11 ஆயிரம் பேர் நியமனம்!

editor 2

மாகாண சபைகளுக்கு உட்பட்ட பாடசாலைகளில் 8,139 ஆசிரியர் பற்றாக்குறை நிலவுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த விடயத்தை கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். 

தற்போது நிலவும் ஆங்கில ஆசிரியர் பற்றாக்குறைக்குத் தீர்வாக, ஓய்வு பெற்ற ஆங்கில ஆசிரியர்கள் மூன்றாண்டு காலத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்தப்பட உள்ளனர். 

இதேவேளை, தற்போது புதிதாக இணைத்துக் கொள்ளப்பட்டுள்ள ஆசிரியர்களின் எண்ணிக்கையும் எதிர்காலத்தில் இணைத்துக் கொள்ளப்படவுள்ள ஆசிரியர்களின் எண்ணிக்கையும் 11,048 என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தேசிய பாடசாலைகளுக்கு 2,500 ஆசிரியர்கள் இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாகவும் கல்வி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

Share This Article