தரம் 1 இற்கு மாணவர்களை அனுமதிக்கும் நடைமுறையில் மாற்றம்!

தரம் 1 இற்கு மாணவர்களை அனுமதிக்கும் நடைமுறையில் மாற்றம்!

editor 2

முதலாம் தரத்துக்கு மாணவர்களை அனுமதிப்பதற்காக தற்போது அமுலில் உள்ள சுற்றறிக்கையை திருத்தம் செய்வதற்கு அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.

திருத்தப்பட்ட சுற்றறிக்கையின் பிரகாரம் 2025 ஆம் ஆண்டும் அதற்கு அடுத்த வருடங்களிலும் முதலாம் தரத்துக்கு மாணவர்களை சேர்ப்பது தொடர்பான பிரேரணை கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவினால் முன்வைக்கப்பட்டது.

கல்வியில் சமமான அணுகலை உறுதி செய்யும் வகையில், மாணவர்களை பாடசாலைக்கு சேர்க்கும் நடவடிக்கைகள் சுற்றறிக்கையின் பிரகாரம் மேற்கொள்ளப்படுகிறது.

கடந்த ஆண்டுகளின் அனுபவத்தின் அடிப்படையில் புதிய திருத்தங்கள் முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share This Article