அனலைதீவிலிருந்து மீன்பிடிக்கச் சென்ற இருவரைக் காணவில்லை!

அனலைதீவிலிருந்து மீன்பிடிக்கச் சென்ற இருவரைக் காணவில்லை!

Editor 1

யாழ்ப்பாணம் ஊர்காவற்றுறை பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட அனலை தீவு பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் இருவரைக் காணவில்லை என்று அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நேற்று மீன்பிடி நடவடிக்கைக்காக இருவரும் படகு ஒன்றில் சென்றதாகவும் இன்று வரையில் அவர்கள் கரை திரும்பவில்லை என்றும் உறவினர்களால் கடற்படையினரிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொலைபேசி உட்பட்ட உபகரணங்கள் எவற்றையும் அவர்கள் எடுத்துச் செல்லவில்லை என்று அனலை தீவுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடற்படையினரும் சக மீனவர்களும் அவர்களைத் தேடும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

காணாமல் போனவர்கள் அமரசிங்கம், குட்டி என்று தெரியவந்துள்ளது.

Share This Article