வவுனியாவில் சுவர் இடிந்து வீழ்ந்து குழந்தை மரணம்!

வவுனியாவில் சுவர் இடிந்து வீழ்ந்து குழந்தை மரணம்!

Editor 1

வவுனியா, ஓமந்தை புதிய வேலர் சின்னக்குளம் பகுதியில் வீட்டின் சுவர் வீழ்ந்து இரண்டு மாத குழந்தை பலியாகியுள்ளது.

முல்லைத்தீவில் வசிக்கும் ச. சிந்துஜன் தனது மனைவி மற்றும் இரண்டு மாத குழந்தையுடன் வவுனியாவில் உள்ள தனது தங்கையின் வீட்டிற்கு கடந்த 7 ஆம் திகதி வந்துள்ளார்.

நிகழ்வொன்றுக்காக வருகை தந்திருந்த நிலையில் தங்கையின் தற்காலிக வீட்டில் தங்கியிருந்த போது நேற்று மாலை சுமார் 5 மணியளவில் வீட்டில் உட்பகுயில் உள்ள கற்சுவர் குழந்தையின் மீது வீழ்ந்துள்ளது.

உடனடியாக வீட்டார் குழந்தையை வவுனியா பொது வைத்தியசாலைக்கு கொண்டு சென்றபோதிலும் பிள்ளை உயிரிழந்துள்ளது.

சடலம் வவுனியா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் ஓமந்தை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

Share This Article