மேல் மாகாணத்தில் 36 பாடசாலைகளுக்கு நாளையும் விடுமுறை!

மேல் மாகாணத்தில் 36 பாடசாலைகளுக்கு நாளையும் விடுமுறை!

Editor 1

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக மேல் மாகாணத்தின் 36 பாடசாலைகளுக்கு நாளையும் விடுமுறை வழங்கப்படவுள்ளது.

மேல் மாகாண கல்வி அமைச்சு இதனைத் தெரிவித்துள்ளது.

இதன்படி, ஹோமாகமை, ஸ்ரீ ஜயவர்தனபுர, களுத்துறை,ஹொரனை மற்றும் நீர்கொழும்பு கல்வி வலயத்திற்குட்பட்ட 36 பாடசாலைகளுக்கே நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Share This Article