யாழ்.பல்கலையின் மருத்துவ ஆராய்ச்சித் தொகுதி கட்டடம் ஜனாதிபதியால் திறக்கப்பட்டது!

யாழ்.பல்கலையின் மருத்துவ ஆராய்ச்சித் தொகுதி கட்டடம் ஜனாதிபதியால் திறக்கப்பட்டது!

Editor 1

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்திற்காக யாழ் நகரில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட எட்டு மாடிகளைக் கொண்ட மருத்துவப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சித் தொகுதி கட்டிடம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் இன்றையதினம் திறந்து வைக்கப்பட்டது.

குறித்த கட்டிடத் தொகுதியில் இரண்டு சத்திர சிகிச்சைக் கூடங்களும், எண்டோஸ்கோபி மற்றும் மேமோகிராம், கருவுறுதல் பராமரிப்பு, யூரோடைனமிக் சேவைகள், கேட்போர் கூடம், முதுகலை மையம், மருத்துவ பணியாளர் அறை மற்றும் கற்பித்தல் வசதிகளும் உள்ளன.

இந்தக் கட்டிடத்தொகுதி 700 மில்லியன் ரூபாய் செலவில் கல்வி அமைச்சின் நிதி ஒதுக்கீட்டுக்கமைய நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பொருட்களின் விலை அதிகரிப்பால் செலவு அதிகரித்து கட்டிடத் தொகுதி இன்னும் நிறைவு பெறாமல் இருப்பதுடன் கட்டிடத்தை முழுமையாக நிர்மாணித்து பூர்த்தி செய்ய இன்னமும் 130 மில்லியன் தேவை என கணக்கிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share This Article