சாதாரண தர மாணவர்களுக்கான அனுமதி அட்டை அடுத்தவாரம்!

சாதாரண தர மாணவர்களுக்கான அனுமதி அட்டை அடுத்தவாரம்!

editor 2

2023ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கான பரீட்சை அனுமதி அட்டை அடுத்த வாரம் முதல் விநியோகிக்கப்படும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதற்கமைய, பாடசாலை விண்ணப்பதாரிகள் தமது பாடசாலைகளின் அதிபர்களினூடாக பரீட்சை அனுமதி அட்டைகளை பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனியார் விண்ணப்பதாரிகளுக்கு அஞ்சல் ஊடாக பரீட்சை அனுமதி அட்டைகள் அனுப்பிவைக்கப்படவுள்ளன.

எதிர்வரும் மே 6ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை மே 15 ஆம் திகதி வரை நடைபெறும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

குறித்த பரீட்சைக்கு 452,979 பரீட்சாத்திகள் தோற்றவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Share This Article