மூடப்பட்டிருந்த பாதுகாப்புக் கடவையைக் கடந்த குடும்பஸ்தர் கிளிநொச்சியில் மரணம்!

மூடப்பட்டிருந்த பாதுகாப்புக் கடவையைக் கடந்த குடும்பஸ்தர் கிளிநொச்சியில் மரணம்!

editor 2

கிளிநொச்சியில் மூடப்பட்டிருந்த பாதுகாப்புக் கடவையை கடக்க முற்பட்ட குடும்பஸ்தர் தொடருந்து மோதி உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை பிற்பகல் 5 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

கிளிநொச்சி டிப்போ வீதியில் தொடருந்து நிலையத்துக்கு அண்மித்துள்ள பாதுகாப்பான தொடருந்து கடவை மூடப்பட்ட நிலையில், குறித்த கடவையை கடக்க முற்பட்டவரையே தொடருந்து மோதியுள்ளது.

விபத்தில் மோட்டார் சைக்கிளில் தொடருந்து கடவையை கடக்க முயன்ற 5 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Share This Article