யானை தாக்கியதில் வவுனியாவில் பெண் மரணம்!

யானை தாக்கியதில் வவுனியாவில் பெண் மரணம்!

editor 2

வவுனியா பிரப்பமடு பகுயில் நேற்று பிற்பகல் வேலையில் பெண் ஒருவரை யானை தாக்கியதில் குறித்த பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

வவுனியா மாமடு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரப்ப மடுப் பகுதியில் வசிக்கும் 55 வயதுடைய பெண் ஒருவர் நேற்று பிற்பகல் தனது மாடுகளை மேய்ச்சல் தரையிலிருந்து அழைத்துச் செல்வதற்காக சென்றிருந்த வேளையிலேயே காட்டு யானையால் தாக்குதலுக்குள்ளாகி உள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இறந்தவரின் சடலம் வவுனியா பொதுவைத்தியசாலைக்கு கொண்டு
வரப்பட்டுள்ள நிலையில், மாமடு பொலிஸார் மேலதிக விசாரனைகளை
மேற்கொண்டுள்ளனர்.

Share This Article