தபால் ஊழியர்களின் விடுமுறைகள் இரத்து!

தபால் ஊழியர்களின் விடுமுறைகள் இரத்து!

Editor 1

தபால் திணைக்களத்தின் அனைத்து ஊழியர்களினதும் விடுமுறைகள் இன்று நள்ளிரவு முதல் நாளை நள்ளிரவு வரை இரத்து செய்யப்படுவதாக, தபால் மாஅதிபர் அறிவித்துள்ளார்.

ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க முன்னணி நேற்று நள்ளிரவு முதல் 24 மணிநேர சுகயீன விடுமுறை தொழிற்சங்கப் போராட்டத்தை முன்னெடுக்க தீர்மானம் செய்துள்ள நிலையில் இவ்வறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது

இதேவேளை தபால் துறையில் நிலவும் 5,000 இற்கும் மேற்பட்ட வெற்றிடங்களை நிரப்பத் தவறியமை, உரிய பதவி உயர்வு வழங்காமை உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து, இப்போராட்டம் முன்னெடுக்க தீரமானிக்கப்பட்டுள்ளாமை குறிப்பிடத்தக்கது.

Share This Article