நேற்று வெளியாகியுள்ள கபொத உயர்தர பரீட்சை 2024 பெறுபேறுகளில் யாழ் . போதனா வைத்தியசாலை பிரதிப் பணிப்பாளர் சிவநாதன் ஜமுனானந்தாவின் இரட்டைப் புதல்வர்கள் சாதனை படைத்துள்ளனர்.
யாழ். இந்துக் கல்லூரி மாணவர்களான இருவரும் உயிரியலில் 3 ஏ பெற்று மாவட்ட ரீதியில நேற்று வெளியாகியுள்ள கபொத உயர்தர பரீட்சை 2024 பெறுபேறுகளில் யாழ் . போதனா வைத்தியசாலை பிரதிப் பணிப்பாளர் சிவநாதன் ஜமுனானந்தாவின் இரட்டைப் புதல்வர்கள் சாதனை படைத்துள்ளனர்.
யாழ். இந்துக் கல்லூரி மாணவர்களான இருவரும் உயிரியலில் 3 ஏ பெற்று மாவட்ட ரீதியில் 1ஆம், 2ஆம் இடங்களையும், நாடு தழுவிய ரீதியில் 3ஆம், 5ஆம் இடங்களையும் பெற்றுள்ளனர்.
ஜமுனானந்தா பிரணவன் (முதலாம் இடம்) மற்றும் ஜமுனானந்தா சரவணன் (இரண்டாம் இடம்) ஆகிய இருவருமே இவ்வாறு சாதணை படைத்துள்ளனர்.
கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகள் நேற்று சனிக்கிழமை வெளியிடப்பட்டன.
க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கு 333,183 மாணவர்கள் தோற்றினர். அவர்களில் 253,390 பேர் பாடசாலை விண்ணப்பதாரர்கள் மற்றும் 79,793 பேர் தனியார் விண்ணப்பதாரர்களாவர்.